» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி சிவன் கோவிலில் நாளை தமிழ் புத்தாண்டு விழா : ஏற்பாடுகளை தீவிரம்

திங்கள் 13, ஏப்ரல் 2026 11:16:15 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் நாளை தமிழ் புத்தாண்டு மற்றும் சித்திரை விஷு விழா மிக விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளது.

தூத்துக்குடியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோவில் என்று அழைக்கப்படும் அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் திருக்கோயிலில், நாளை (14.04.2026, செவ்வாய்க்கிழமை) தமிழ் புத்தாண்டு மற்றும் சித்திரை விஷு விழா மிக விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளது.

சித்திரை மாதப்பிறப்பை முன்னிட்டு, இக்கோயிலின் சுவாமி ஸ்ரீ ஆறுமுக நயினார் சன்னதியில் சித்திரை விஷு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்காக அதிகாலை 4:00 மணிக்குத் திருக்கோயில் நடை திறக்கப்பட்டு, 4:30 மணிக்குத் திருவனந்தல் பூஜையுடன் வழிபாடுகள் தொடங்கும். அதிகாலை 5:00 மணிக்கு மூலஸ்தானத்தில் சுவாமி ஸ்ரீ ஆறுமுகப் பெருமானுக்குச் சிறப்பு அபிஷேகமும், காலை 6:00 மணிக்கு உருகு சட்ட சேவையும் நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து காலை 7:00 மணிக்குச் சுவாமி உற்சவ மண்டபத்திற்கு எழுந்தருளுவார். காலை 10:00 மணிக்கு ஸ்ரீ சண்முகர் அபிஷேக மண்டபத்தில் மகா அபிஷேகம் நடைபெறும். பிற்பகல் 2:30 மணிக்கு ஸ்ரீ ஆறுமுக அர்ச்சனையும் தீபாராதனையும் நடைபெறும். இரவு 8:00 மணிக்குத் தீபாராதனை முடிந்து, இரவு 10:00 மணிக்குச் சுவாமி மூலஸ்தானம் சென்றடைவார்.

விழாவின் முக்கிய நிகழ்வாகச் சுவாமி மடம் வீதி மற்றும் நான்கு ரத வீதிகளில் திருவுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





Thoothukudi Business Directory