» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அம்பேத்கர் பிறந்தநாள்: ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் உறுதிமொழி ஏற்பு!

திங்கள் 13, ஏப்ரல் 2026 3:23:13 PM (IST)


அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்திய அரசியலமைப்பின் தந்தை, சமூக சீர்திருத்தவாதி, சட்ட வல்லுநர் மற்றும் பொருளாதார நிபுணரான பி.ஆர். அம்பேத்கர் (ஏப்ரல் 14, 1891 - டிசம்பர் 6, 1956), ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் தீண்டாமை ஒழிப்புக்காகவும் தன் வாழ்நாள் முழுவதும் போராடியவர். இந்திய அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவராக இருந்து, உலகின் மிக நீண்ட எழுதப்பட்ட அரசியலமைப்பை உருவாக்கிய இவருக்கு, 1990-ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய 'பாரத ரத்னா' விருது வழங்கப்பட்டது.

சாதிப் பாகுபாடற்ற சமத்துவ சமுதாயத்தைப் படைக்க பாடுபட்ட அம்பேத்கரின் பிறந்தநாளான ஏப்ரல் 14-ஆம் தேதியை, தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் 'சமத்துவ நாள்' ஆகக் கொண்டாடி வருகிறது. இதையொட்டி, அனைத்து அரசு அலுவலகங்களிலும் சமத்துவ நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆட்சியர் விஷு மகாஜன் உறுதிமொழியை வாசிக்க, அலுவலர்கள் அதனைத் திரும்பக் கூறி ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் குருச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கல்யாணசுந்தரம், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பென்னட் ஆசீர் மற்றும் பல்வேறு அரசுத் துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





Thoothukudi Business Directory