» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி காய்கறி மார்க்கெட்டில் அதிமுக வேட்பாளர் சி.த.செல்லப்பாண்டியன் தீவிர வாக்குச் சேகரிப்பு

திங்கள் 13, ஏப்ரல் 2026 3:16:08 PM (IST)



தூத்துக்குடி காய்கறி மார்க்கெட்டில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் அதிமுக வேட்பாளர் சி.த.செல்லப்பாண்டியன் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். 

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன், இன்று 30-வது வார்டு டூவிபுரம் விநாயகர் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு தனது பிரசாரத்தைத் தொடங்கினார். டூவிபுரம் மற்றும் காய்கறி மார்க்கெட் பகுதிகளில் அவர் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். 

"முன்னாள் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தபோதும், நான் இதே மார்க்கெட்டில் வாழை இலை ஏலம் விடும் தொழிலைச் செய்து, உங்களில் ஒருவனாகவே பழகி வந்தேன். தொழிலாளர்களின் தோழனான எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பளிக்க வேண்டும்," என அவர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார். அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களைச் சுட்டிக்காட்டிய அவர், தேர்தல் அறிக்கையில் உள்ள வாக்குறுதிகள் அனைத்தும் ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தார். 

பிரசாரத்தில் காய்கறி மார்க்கெட் தலைவர் எஸ்டிஎஸ் ஞானராஜ், மேலாளர் நியூட்டன், அதிமுக நிர்வாகிகள் மில்லை ராஜா, ஆறுமுகநயினார் மற்றும் பாஜக மாவட்டப் பொருளாளர் வக்கீல் சண்முகசுந்தரம் உட்பட கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




Thoothukudi Business Directory