» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சாலையில் கிடந்த மணி பர்ஸை காவல்துறையிடம் ஒப்படைத்த சிறுவர்கள்: பாராட்டுக்கள் குவிகிறது!
திங்கள் 13, ஏப்ரல் 2026 10:22:07 AM (IST)

ஆத்தூரில் சாலையில் சிதறி கிடந்த பணத்துடன் கூடிய மணி பர்ஸை எடுத்து, உரியவர்களிடம் ஒப்படைக்க காவல்துறையிடம் வழங்கிய சிறுவர்களின் நேர்மை பொதுமக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் சோமநாதர் கோயில் தேர் அருகே, நேற்று சுமார் ரூ. 3,600 ரொக்கப் பணம் இருந்த கருப்பு நிற மணி பர்ஸ் ஒன்று கீழே விழுந்து கிடந்துள்ளது. அவ்வழியாகச் சென்ற முகமது இர்பான் (14), அமர்ஜெர்ரி (12), பிரஜித் (14) மற்றும் திலீப்குமார் (14) ஆகிய நான்கு சிறுவர்கள் அந்தப் பையை எடுத்துள்ளனர்.
பணத்தைக் கண்டெடுத்த சிறுவர்கள், சற்றும் தாமதிக்காமல் அதனை ஆத்தூர் காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். அங்கு பணியில் இருந்த காவல் ஆய்வாளர் பிரபாகரனிடம் அந்தப் பணப் பையை ஒப்படைத்தனர். சிறுவர்களின் இந்த உயரிய பண்பையும், நேர்மையையும் கண்டு வியந்த ஆய்வாளர், அவர்களுக்குத் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
தற்காலச் சூழலில் சிறுவர்களின் இந்த நேர்மையான செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சமூக வலைத்தளங்களிலும் இந்தச் சிறுவர்களுக்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அம்பேத்கர் பிறந்தநாள்: ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் உறுதிமொழி ஏற்பு!
திங்கள் 13, ஏப்ரல் 2026 3:23:13 PM (IST)

தூத்துக்குடி காய்கறி மார்க்கெட்டில் அதிமுக வேட்பாளர் சி.த.செல்லப்பாண்டியன் தீவிர வாக்குச் சேகரிப்பு
திங்கள் 13, ஏப்ரல் 2026 3:16:08 PM (IST)

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் பங்குனி பெருந்திருவிழா தேரோட்டம் கோலாகலம்!
திங்கள் 13, ஏப்ரல் 2026 12:43:41 PM (IST)

தூத்துக்குடியில் இதுவரை ரூ.83 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.19 லட்சம் பொருட்கள் பறிமுதல்!
திங்கள் 13, ஏப்ரல் 2026 12:28:53 PM (IST)

குடும்பச் சூழல்: மனவேதனையில் இருவர் தற்கொலை!
திங்கள் 13, ஏப்ரல் 2026 12:01:41 PM (IST)

சிறுவனை அடித்ததை தட்டிக்கேட்ட தந்தை மீது கல்வீசி தாக்குதல் : தூத்துக்குடியில் ரவுடி கைது!
திங்கள் 13, ஏப்ரல் 2026 11:17:06 AM (IST)








சங்கரன்Apr 13, 2026 - 11:47:52 AM | Posted IP 104.2*****