» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி பிரதான சாலையில் தேங்கி கிடக்கும் வாகனங்கள், குப்பைகள்: அப்புறப்படுத்த கோரிக்கை!

திங்கள் 22, டிசம்பர் 2025 11:13:58 AM (IST)



தூத்துக்குடி டூவிபுரம் பிரதான சாலையில் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள், மற்றும் குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தூத்துக்குடி டூவிபுரம் பகுதியில் பள்ளிக்கூடங்கள், தேவாலயங்கள், தாலுகா அலுவலகம் உட்பட முக்கிய பகுதிகள் அமைந்துள்ளது. இந்த சாலையில் கடந்த ஓராண்டிற்கு மேலாக உபயோகப்படாத வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் வீட்டில் உள்ள கழிவுப்பொருட்களை சாலையின் ஓரத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளது.

இதனால் அந்த சாலையில் வாகனங்கள் செல்வதற்குக இடையூறாக உள்ளது. பாதசாரிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக சம்பவ இடத்தில் உள்ள குப்பைகளை உடனடியாக அகற்றவும் சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நீண்ட நாள் செயல்பாட்டிற்கு இல்லாத வாகனங்களை அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



CSC Computer Education



Thoothukudi Business Directory