» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பைக் விபத்தில் காயமடைந்த கல்லூரி மாணவர் சாவு: மேலும் 2 பேருக்கு தீவிர சிகிச்சை!

திங்கள் 22, டிசம்பர் 2025 7:58:23 AM (IST)

மெஞ்ஞானபுரம் அருகே 2 பைக்குகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் படுகாயமடைந்த கல்லூரி மாணவர் உயிரிழந்தார். மேலும் 2பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் பிரகாசபுரத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மகன் அந்தோணி பீட்டர் (23), இவர் மூக்குபீறியில் சொந்தமாக சவுண்ட் சர்வீஸ் நடத்தி வந்தார். இவர் நேற்று முன்தினம் வேலை நிமித்தமாக நாசரேத்தில் டி.கே.சி. நகர் சந்திப்பு பகுதியிலிருந்து அச்சம்பாடு சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அப்ேபாது அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அந்தோணிபீட்டர் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

மற்றொரு மோட்டார்சைக்கிளில் வந்த கல்லூரி மாணவர்களான சாத்தான்குளம் காமராஜ்நகரை சேர்ந்த ஆண்ட்ரோஸ் பிரபு மகன் நார்மன் ஜோஸ்வா (18), வெங்கட்ராயபுரம் வடக்குதெருவை சேர்ந்த பேச்சி மகன் சுடலை சூர்யா (19), சாத்தான்குளம் கொத்துவா பள்ளிவாசல் தெருவை சேர்ந்த ரிபாயுதின் மகன் பெரோஸ்கான் (18) ஆகியோர் படுகாயமடைந்தனர். இந்த 3 பேரும் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில் நார்மன் ஜோஸ்வா நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 2பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து மெஞ்ஞானபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



CSC Computer Education



Thoothukudi Business Directory