» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அகில இந்திய மின்னொளி கூடைப்பந்து போட்டி : பெங்களூர், சென்னை அணிகள் சாம்பியன்

திங்கள் 3, நவம்பர் 2025 11:33:12 AM (IST)



தூத்துக்குடியில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான கல்லூரி அணிகளுக்கிடையேயான மின்னொளி கூடைப்பந்து போட்டியில் பெண்கள் பிரிவில் பெங்களூர் அணியும், ஆண்கள் பிரிவில் சென்னை அணியும் கோப்பையை வென்றன. 

தூத்துக்குடி மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் 15வது அகில இந்திய பல்கலைக்கழக கல்லூரி ஆண்–பெண் பிரிவு மின்னொளி கூடைப்பந்து போட்டி கடந்த 29ஆம் தேதி தொடங்கி, நவ.2ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தப் போட்டியில் தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பல்வேறு பல்கலைக்கழக மற்றும் கல்லூரி அணிகள் கலந்து கொண்டனர்.‌

பெண்கள் பிரிவில் லீக் முறையில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் எம் ஓ பி வைஷ்ணவ் கல்லூரி அணியும் பெங்களூர் ஜெயின் யுனிவர்சிட்டி அணியும் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூர் ஜெயின் யுனிவர்சிட்டி அணி 69-60 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றனர். 

இதைத்தொடர்ந்து ஆண்கள் பிரிவில் சென்னை இந்துஸ்தான் கல்லூரி அணியும் பெங்களூர் ஜெயின் யுனிவர்சிட்டி அணியும் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சென்னை இந்துஸ்தான் கல்லூரி அணி 77-67 என்ற புள்ளி வெற்றி பெற்றது. பின்னர் நடைபெற்ற பரிசளிப் விழாவில் வெற்றி பெற்ற அணிக்கு ரொக்க பரிசு மற்றும் கேடயமும் வழங்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி மாணவர்: கடத்தல் 3 சிறுவர்கள் கைது!

வெள்ளி 19, டிசம்பர் 2025 8:09:59 AM (IST)

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education


Arputham Hospital




Thoothukudi Business Directory