» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சாத்தான்குளம் பள்ளியில் தேசிய இரட்டையர்கள் தினம்

வெள்ளி 19, டிசம்பர் 2025 11:05:40 AM (IST)



சாத்தான்குளம் பள்ளியில் தேசிய இரட்டையர்கள் தினம் கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம், டி.என்.டி.டி.ஏ.ஆர்.எம்.பி. புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப் பள்ளியில் இம்மாவட்டத்திலேயே அதிகமான இரட்டையர்கள், 12 ஜோடி மாணவ மாணவிகள் இரட்டையர்களாக, அதில் 7 ஜோடி சகோதரர்களும், 3 ஜோடி சகோதரிகளும், 2 ஜோடி சகோதர சகோதரிகளுமாக கல்வி பயின்று வருகிறார்கள். 

அவர்களை தலைமையாசிரியர் செல்லப்பாண்டியன் இரட்டையர்கள் தினம், மற்றும் இரட்டையர்கள் உருவாகும் விதம் போன்றவற்றை எடுத்துறைத்து வருங்காலங்களில் இரட்டையர்களாக அரசு வேலைகளில் பிரகாசிக்க வேண்டும் என இரட்டையர்களுக்கு இனிப்பு கொடுத்து வாழ்த்தினார்கள். 

இந்நிகழ்சியில் உதவி தலைமையாசிரியர்கள் விஜயராணி, வளர்மதி ராஜபாய், மற்றும் அறிவியல் ஆசிரியர் லயன் டேனியல், ஆசிரியர்கள்அக்னஸ், ஜாய்ஸ்பாப்பா, ஸ்டீபன் மற்றும் ஆசிரிய ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு இரட்டையர்களை வாழ்த்தி சிறப்பித்தனர்..


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் மரம் நடும் பசுமை விழா

வெள்ளி 19, டிசம்பர் 2025 12:49:02 PM (IST)

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education

Arputham Hospital








Thoothukudi Business Directory