» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காப்பீட்டுத் துறையில் 100 சதவீத அந்நிய முதலீடு மாசோதாவை எதிர்த்து வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

வெள்ளி 19, டிசம்பர் 2025 11:00:23 AM (IST)



காப்பீட்டுத் துறையில் அந்நிய மூலதன உச்சவரம்பை 100 சதவீதம் உயர்த்தும் மாசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி தூத்துக்குடியில் வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காப்பீட்டுத் துறையில் அந்நிய மூலதன உச்சவரம்பை 100சதவீதம் உயர்த்தும் மாசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி வங்கி ஊழியர் சங்கம் ஏஐபிஇஏ, பிஇஎப்ஐ  மற்றும் ஜிஐசி மற்றும் முகவர்கள் முதல்நிலை அதிகாரிகள், ஊழியர்கள், வளர்ச்சி அதிகாரிகள், பென்சன்தாரர்கள், சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள எல்ஐசி அலுவலகம் முன்பு நடைபெற்றது.
     
ஆர்ப்பாட்டத்திற்கு கிளைத்தலைவர் கருப்பையா தலைமை வகித்தார். கோட்டச்சங்க இணைச்செயலாளர். சீனிவாசன் துவக்கவுரையாற்றினார். பிஇஎப்ஐ சார்பாக தங்கமாரியப்பன், ஏஐபிஇஏ சார்பாக கிருஷ்ண மூர்த்தி, எல்ஐசி பென்சனர் சங்கம் சார்பாக சேகர் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். சிஐடியு  மாநில துணைத்தலைவர் ரசல் நிறைவுரையாற்றினார். மகளிர் துணைக்குழு இணை அமைப்பாளர் ரமணி நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் மரம் நடும் பசுமை விழா

வெள்ளி 19, டிசம்பர் 2025 12:49:02 PM (IST)

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education



Arputham Hospital






Thoothukudi Business Directory