» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 60 டன் திறன் கொண்ட இழுவை படகு வருகை
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:16:07 AM (IST)

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் புதிதாக 60 டன் திறன் கொண்ட ஓசியன் அலையன்ஸ் என்ற இழுவை படகு வந்தது.
இழுவை படகு வரவேற்பு நிகழ்ச்சியில், வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத் தலைவர் சுசாந்த குமார் புரோஹித், துணைத் தலைவர் ராஜேஷ் சௌந்தரராஜன் மற்றும் மூத்த துறைமுக அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்திய தயாரிப்பில் உருவாக்கப்பட்ட இழுவை படகானது 60 டன் திறன், 498 டன் மொத்த உள்புற கனஅளவை கொண்டது. இப்படகு உடுப்பியிலுள்ள, கொச்சின் கப்பல் கட்டும் நிறுவனத்தால் கட்டப்பட்டதாகும்.
வ.உ.சி. துறைமுகம், இந்த இழுவை படகை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை குஜராத்தில் அமைந்துள்ள Ocean Sparkle Limited நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது. மேலும் இந்த இழுவை படகு 7 ஆண்டு காலம் குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்த இழுவை படகுடன் சேர்த்து துறைமுகத்தில் மொத்தம் 4 இழுவை படகுகள் செயல்படும். அவற்றில் ஒன்று 45 டன் திறன் கொண்ட துறைமுகத்துக்குச் சொந்தமான இழுவை படகு, மற்ற இரண்டும் தலா 50 டன் திறன் கொண்ட ஒப்பந்த இழுவை படகுகள் ஆகும்.
தற்போது சேர்க்கப்பட்டுள்ள 60 டன் திறன் இழுவைப் படகு எளிமையான மற்றும் பாதுகாப்பான கப்பல் இயக்கத்தை உறுதி செய்வதாக அமைந்துள்ளது. இதுகுறித்து வ.உ.சி. துறைமுகத் தலைவர் சுசாந்த குமார் புரோஹித் கூறுகையில், 60 டன் திறன் இழுவைப் படகின் சேர்க்கையால், துறைமுகத்தின் செயல்திறன் பெரிதும் மேம்படும். பெரிய கப்பல்களின் பாதுகாப்பான கையாளும் திறன் உறுதி செய்யப்படும். துறைமுகத்தினுள் கப்பல்கள் வந்து செல்லும் நேரம் குறைக்கப்படும். இது துறைமுகத்தின் திறனை வலுப்படுத்துவதிலும், இந்தியாவின் கடல்சார்ந்த வளர்ச்சியை ஆதரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி மாணவர்: கடத்தல் 3 சிறுவர்கள் கைது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:09:59 AM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் களமிறங்கும் முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:00:42 AM (IST)

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)










