» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காதல் திருமணம் செய்த 3 மாதத்தில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

திங்கள் 22, செப்டம்பர் 2025 8:24:44 AM (IST)

பாவூர்சத்திரம் அருகே காதல் திருமணம் செய்த 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் கட்டாரிமங்கலம் பகுதியை சேர்ந்தவர் எட்வர்ட் செல்வராஜ் மகன் சுதாகர் (21). கூலித்தொழிலாளியான இவர் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் கடந்த மூன்று மாதத்திற்கு முன் திருமணம் செய்துகொண்டனர். இதையடுத்து சுதாகர் தனது காதல் மனைவியுடன் பாவூர்சத்திரத்திலேயே தங்கியிருந்து கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார்.

ஆசை ஆசையாக காதல் வாழ்க்கையை தொடங்கிய நிலையில் இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட தொடங்கியது. இதனால் மனவேதனை அடைந்த சுதாகர் கடந்த சில நாட்களாக விரக்தியில் இருந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாருமில்லாத நேரத்தில் சுதாகர் திடீரென விஷம் குடித்துவிட்டு மயங்கினார். அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சுதாகர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். ஆனால் அவர் நேற்று முன்தினம் இரவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பாவூர்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி மாணவர்: கடத்தல் 3 சிறுவர்கள் கைது!

வெள்ளி 19, டிசம்பர் 2025 8:09:59 AM (IST)

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





CSC Computer Education


Arputham Hospital



Thoothukudi Business Directory