» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மகளிர் உதவி எண் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி: எஸ்பி ஆல்பர்ட் ஜான் துவக்கி வைத்தார்

சனி 8, மார்ச் 2025 3:07:35 PM (IST)



தூத்துக்குடியில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கான மாரத்தான் மற்றும் வாக்கத்தான் நிகழ்ச்சிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் உதவி எண் 181-ஐ விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக இன்று நடைபெற்ற பெண்களுக்கான மாரத்தான் மற்றும் வாக்கத்தான் நிகழ்ச்சிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்ந நிகழ்ச்சிகளில் தூத்துக்குடி மாவட்ட மகளிர் காவல் துறையினர் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவிகள் உட்பட 600க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

மாரத்தான் நிகழ்ச்சி குரூஸ் பர்னாந்து சிலை சந்திப்பிலிருந்து துவங்கி ரோச் பூங்காவிலும், வாக்கத்தான் நிகழ்ச்சி பழைய துறைமுகம் சந்திப்பிலிருந்து துவங்கி ரோச் பூங்காவிலும் நிறைவடைந்தது. பின்னர் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு முதல் 3 இடங்களை பிடித்த பெண்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிசு வழங்கி பாராட்டினார். போட்டிகளில் பங்குபெற்ற அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். 



இந்நிகழ்வின்போது தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் ஆறுமுகம், தீபு, தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் மதன் உட்பட காவல்துறையினர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education




Arputham Hospital



Thoothukudi Business Directory