» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மாலத்தீவுக்கு கடத்த முயன்ற ரூ.80 கோடி போதைப் பொருள் சிக்கியது: 2 பேரிடம் விசாரணை

சனி 8, மார்ச் 2025 8:51:33 AM (IST)

தூத்துக்குடியில் இருந்து கப்பல் மூலம் மாலத்தீவுக்கு கடத்த முயன்ற ரூ.80 கோடி மதிப்பிலான போதைப் பொருள் சிக்கியது. இது தொடர்பாக 2பேரை அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் இருந்து மாலத்தீவு நோக்கி, கருங்கற்கள் ஏற்றிக்கொண்டு சென்ற பார்ஜர் என அழைக்கப்படும் மிதவை கப்பலை, சந்தேகத்தின்பேரில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தடுத்து நிறுத்தி தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டுவந்தனர்.

அதில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் 16 பொட்டலங்களில் 29 கிலோ ‘ஹசீஷ்’ என்ற வகை போதைப்பொருள் இருந்தது கண்டறியப்பட்டது. இதன் சர்வதேச மதிப்பு  ரூ .80 கோடி என்று தெரிகிறது.  இதனை கடத்தி சென்றதாக  பார்ஜரில் வேலை செய்து வரும் திருச்செந்தூர் ஆலந்தலையை சேர்ந்த கிளிப்டன், உடந்தையாக இருந்த தென்காசி மாவட்டத்தை சேர்ந்த நவமணி ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



CSC Computer Education



Thoothukudi Business Directory