» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு

சனி 8, மார்ச் 2025 8:41:19 AM (IST)

8 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மேல்மாந்தை பகுதியைச் சோ்ந்த ஸ்ரீனிவாசன் மகன் ராமசாமி (52). இவா் விளாத்திகுளம் அனைத்து மகளிா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் 8 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாக, கடந்த 2020ஆம் ஆண்டு போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டாா்.

இவ்வழக்கு விசாரணை, தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ், குற்றம்சாட்டப்பட்ட ராமசாமிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டாா். இவ்வழக்கில் அரசு தரப்பு வக்கீல் முத்துலட்சுமி ஆஜரானார்..


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education



Arputham Hospital



Thoothukudi Business Directory