» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குலசை முத்தாரம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.56 லட்சம் வருவாய்

சனி 8, மார்ச் 2025 8:34:31 AM (IST)



குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.56 லட்சம், 210 கிராம் தங்கம், 1221 கிராம் வெள்ளி கிடைத்தது.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் தசரா திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு தினமும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோயிலில் மாதந்தோறும் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்படும். 

அதன்படி நேற்று வெள்ளிக்கிழமை கோயிலில் உள்ள 18 உண்டியல்களும் திறக்கப்பட்டு காணிக்கைகளை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் ரூபாய் 56 லட்சத்து 3ஆயிரத்து 640 காணிக்கையாக கிடைத்தது. மேலும் 210 கிராம் தங்கம் 1221 கிராம் வெள்ளி ஆகியவை காணிக்கையாக பெறப்பட்டன.

அறநிலையத்துறை துணை ஆணையர் கோமதி, அறங்காவலர் குழு தலைவர் கண்ணன், செயல் அலுவலர் வள்ளிநாயகம், சாத்தான்குளம் சரக ஆய்வர் முத்து மாரியம்மாள், அயல் பணியாளர் வெங்கடேஸ்வரி, அறங்காவலர் குழு உறுப்பினர் கணேசன், உடன்குடி திமுக பிரமுகர் ஹரி கிருஷ்ணன் மற்றும் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டு காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education

Arputham Hospital







Thoothukudi Business Directory