» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பைக்குகள் திருடிய வாலிபர் கைது!

சனி 8, மார்ச் 2025 8:30:50 AM (IST)

தூத்துக்குடியில் 2 பைக்குகள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி நகர போலீஸ் துணை கண்காணிப்பாளர் மதன் தலைமையிலான தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது பழைய பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் முன்னுக்கு பின் முறனாக பேசியதால் அவரை மத்திய பாகம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். 

விசாரணையில் அவர் எப்போது வென்றான் அருகில் உள்ள ஆதனூர் கிராமம் மேல தெருவை சேர்ந்த கோபால்சாமி மகன் ஆறுமுகசாமி (29) என்பதும், இவர் தூத்துக்குடியில் 2 மோட்டார் பைக்கை திருடியதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து 2 பைக்கையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மத்திய பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் அவரை கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி பேரூரணி சிறையில் அடைத்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education





Arputham Hospital



Thoothukudi Business Directory