» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

உப்பளத் தொழிலாளர் நல வாரியத்திற்கு ரூ.20கோடி ஒதுக்கிட வேண்டும் : தமிழக முதல்வருக்கு கோரிக்கை!

சனி 8, மார்ச் 2025 8:22:36 AM (IST)

தமிழ்நாடு பட்ஜெட்டில் உப்பளத் தொழிலாளர் நல வாரியத்திற்கு குறைந்தபட்சம் 20 கோடி நிதி ஒதுக்கீட வேண்டும் என முதலமைச்சருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர் சங்கம் மாநிலத் தலைவர் மா.கிருஷ்ண மூர்த்தி வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாடு அரசு தொழிலாளர் துறை மற்றும் இதர துறைகளிலும் இயங்கும் அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான நல வாரியங்களுக்கும் ஜிஎஸ்டியில் (GST) ஒரு சதம் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். 

தமிழ்நாடு பட்ஜெட்டில் 3 சதம் நிதி அமைப்புசாரா தொழிலாளர் சமூக பாதுகாப்புக்காக ஒதுக்கீடு செய்ய வேண்டும். பட்ஜெட்டில் உப்பளத் தொழிலாளர் நல வாரியத்திற்கு குறைந்தபட்சம் 20 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உப்பள தொழிலாளர் நலவாரியத்தை நடைமுறை செயல்பாட்டிற்கு துரிதமாக கொண்டு வருதல் வேண்டும். 

தமிழ்நாடு அரசு உப்பள தொழிலாளர் நல வாரியத்திற்கு உப்பு உற்பத்தியில் மற்றும் உப்பு ஏற்றுமதியில் 1 சதம் லெவி ஒதுக்கீடு செய்திட வேண்டும். தமிழ்நாடு அரசு அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கென உரிய முழுமையான நிதி ஒதுக்கீட்டுடன் வீடு கட்டிக் கொடுக்கும் திட்டம் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





CSC Computer Education


Arputham Hospital



Thoothukudi Business Directory