» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
நாசரேத் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்
வியாழன் 30, ஜனவரி 2025 10:02:58 AM (IST)

நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஜ பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.
கல்லூரியின் தாளாளர் வழக்கறிஞர் ரவீந்திரன் சார்லஸ் தலைமை தாங்கினார். முதல்வர் கோயில்ராஜ் ஞான தாசன் வரவேற்புரை நிகழ்த்தினார். எந்திரவியல் துறைத்தலைவர் பிரபாகர் வேதசிரோன்மணி ஆரம்ப ஜெபம் செய்தார். கல்லூரியின் வேலை வாய்ப்பு அலுவலர் மற்றும் ஆட்டோமொபைல் துறை தலைவர் ஜான் வெஸ்லி கம்பெனியை பற்றிய விளக்க உரையை வழங்கினார்.
கல்லூரியின் இந்த முகாமில் சென்னை மண்டோ ஆனந்த் கம்பெனியின் மனிதவள மேம்பாட்டு அதிகாரிகள் நரேந்திர குமார், கோவிந்தராஜ், டெனுஷா ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் நிறுவனம் பற்றி மாணவர்களுக்கு சிறப்புரை நிகழ்த்தினார். இந்த முகாமில் தேர்வான 26 மாணவர்கள் மற்றும் 8 மாணவியர் வேலை வாய்ப்பு ஆணைகளைப் பெற்றனர். முடிவில் கல்லூரி பர்சர் தனபால் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் தலைமையில் முதல்வர் மற்றும் வேலை வாய்ப்பு அலுவலர் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

யோசனைகளைச் சொந்த வணிகமாக மாற்றுவது எப்படி? - மகளிர் கல்லூரியில் வழிகாட்டல் நிகழ்ச்சி!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 4:06:19 PM (IST)

மர்காஷிஸ் கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி: நாசரேத் காவல் ஆய்வாளர் வனசுந்தர் பங்கேற்பு!
புதன் 1, ஜூலை 2026 7:59:13 PM (IST)

தருவைக்குளம் அரசுப் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி: மாணவர்களுக்கு அறிவுரை!
செவ்வாய் 30, ஜூன் 2026 11:44:24 AM (IST)

நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் போதைப்பொருள் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
வியாழன் 25, ஜூன் 2026 3:56:20 PM (IST)

கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம் கல்லூரியில் தேசிய வாசிப்பு வார விழா நிகழ்ச்சி!
வியாழன் 25, ஜூன் 2026 8:35:01 AM (IST)

தூய இஞ்ஞாசியார் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் தினம் விழிப்புணர்வுப் பேரணி!
வெள்ளி 5, ஜூன் 2026 5:24:51 PM (IST)

