» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

சக்தி வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் சர்வ சமய வழிபாடு

செவ்வாய் 23, டிசம்பர் 2025 10:54:04 AM (IST)



தூத்துக்குடி சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழாவில் சர்வசமய வழிபாடு சாரண, சாரணிய இயக்கத்தின் சார்பாக நடைபெற்றது.

பாரத சாரண, சாரணிய இயக்கம் சார்பில் கிறிஸ்துமஸ் விழாவினை இனம், மொழி, மதம் சார்பற்ற விழாவாக கொண்டாடும் நோக்கில் சர்வ சமய வழிபாடு நடத்தப்பட்டது. வழிபாட்டில் சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியின் தாளாளரும் முதல்வருமான ஆ.ஜெயாசண்முகம் மற்றும் சாரண, சாரணிய பொறுப்பாசிரியைகள் உதயம்மாள், மணிமேகலை, கிங்ஸ்லின் சோபியா, ஜெபமாலை, செல்வபொன்னரசி ஆகியோர் பெரும் பங்கு வகித்தனர்.

சர்வ சமய வழிபாட்டில் இந்து, முஸ்ஸீம், கிறிஸ்தவர் ஆகிய மதங்களுக்குரிய வழிபாடுகள் சாரண, சாரணியர்களால் செய்யப்பட்டது மற்றும் ஏனைய சாரண, சாரணியர்கள், பள்ளி ஆசிரியைகள் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை துணை முதல்வர் ரா.ச.பிரியங்கா செய்திருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory