» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

ஆட்சியருக்கு பொங்கல் வாழ்த்து அஞ்சல் அட்டை அனுப்பிய பள்ளி மாணவ, மாணவிகள்!

திங்கள் 12, ஜனவரி 2026 5:32:56 PM (IST)


தூத்துக்குடி பள்ளிகளில் மாணவ, மாணவிகள் மாவட்ட ஆட்சியருக்கு பொங்கல் வாழ்த்து அஞ்சல் அட்டை அனுப்பும் நிகழ்வு நடைபெற்றது 

தூத்துக்குடி தாளமுத்துநகர் ஆர்.சி. நடுநிலைப் பள்ளியில், புத்தகம் வாசிப்பு நற்பணி மன்றம் மற்றும் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் மாணவ, மாணவிகள், பொங்கல் வாழ்த்து அஞ்சல் அட்டையில் எழுதி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பினர். நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் வின்சென்ட் தலைமை வகித்தார். 

இதுபோல் தருவைகுளம் கத்தரினாள் மகளிர் பள்ளி, தூய மிக்கேல் தொடக்க பள்ளிகளில் மாணவ மாணவிகள் பொங்கல் வாழ்த்து அஞ்சல் அட்டைகளை ஆட்சியருக்கு அனுப்பினர். நிகழ்வுக்கான ஏற்பாடுகளை புத்தக வாசிப்பு நற்பணி மன்றம் மற்றும் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் லாரன்ஸ், ரவி ஆகியோர் செய்திருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory