» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காதலிக்க மறுத்ததால் ஆத்திரம்: வீடு புகுந்து தாய், மகள் மீது தாக்குதல் நடத்திய வாலிபர் கைது!
ஞாயிறு 9, ஆகஸ்ட் 2026 9:10:12 AM (IST)
ஆறுமுகநேரியில் காதலிக்க மறுத்ததால் இளம்பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து அவரையும் அவரது தாயாரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி செல்வராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து மகன் இசக்கி ராஜேஷ் (25). கூலித் தொழிலாளியான இவர், அதே பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம்பெண்ணைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அந்த இளம்பெண் இசக்கி ராஜேஷிடம் பேசுவதைத் தவிர்த்து வந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த இசக்கி ராஜேஷ், இளம்பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது இளம்பெண்ணைத் தாக்கி, "என்னை ஏன் காதலிக்க மறுக்கிறாய்?" எனக் கூறி கீழே தள்ளியுள்ளார். இதைத் தடுக்க முயன்ற இளம்பெண்ணின் தாயாரையும் இசக்கி ராஜேஷ் தாக்கியுள்ளார்.
மேலும், தன்னைத் திருமணம் செய்யாவிட்டால் தாய், மகள் இருவரையும் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், ஆறுமுகநேரி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் கோயில்பிள்ளை வழக்குப் பதிவு செய்து, தாய் மற்றும் மகளைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த இசக்கி ராஜேஷைக் கைது செய்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி திரேஸ்புரத்தில் மீன்கள் வரத்து குறைவு : கூடுதல் விலைக்கு விற்பனை; மீனவர்கள் மகிழ்ச்சி!
ஞாயிறு 9, ஆகஸ்ட் 2026 9:07:23 AM (IST)

விமர்சனங்களை அடக்குமுறையால் எதிர்கொள்ளக் கூடாது: தூத்துக்குடியில் ஆர்.பி. உதயகுமார் பேட்டி!
ஞாயிறு 9, ஆகஸ்ட் 2026 8:55:48 AM (IST)

தவெக அரசு என்னைத் தீவிரவாதியைப் போல நடத்தியது: ஜீ.வி. மாா்க்கண்டேயன் எம்எல்ஏ பேட்டி
ஞாயிறு 9, ஆகஸ்ட் 2026 8:51:15 AM (IST)

த.வெ.க. புதிய மாவட்ட செயலளாராக அமைச்சர் ஸ்ரீநாத் நியமனம்!
சனி 8, ஆகஸ்ட் 2026 10:21:54 PM (IST)

தொகுதி மறுவரையறை கூட்டம் திசைதிருப்பும் நாடகம் : கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு!
சனி 8, ஆகஸ்ட் 2026 8:17:18 PM (IST)

தூத்துக்குடியில் வளர்ச்சித் திட்டப் பணிகள்: மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முரளிதரன் ஆய்வு!
சனி 8, ஆகஸ்ட் 2026 5:55:52 PM (IST)









ஆட்டோAug 9, 2026 - 09:34:38 AM | Posted IP 104.2*****