» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பேருந்து நிலைய கட்டிடத்தை இடிக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும்: வணிகர் சங்கப் பேரவை கோரிக்கை!
சனி 8, ஆகஸ்ட் 2026 5:27:39 PM (IST)

உடன்குடி தேர்வு நிலை பேரூராட்சியில், கடந்த திமுக ஆட்சியில் கட்டப்பட்ட பேருந்து நிலையக் கட்டிடத்தை இடிக்கும் திட்டத்தை முதலமைச்சர் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனத் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாகத் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநில இணைச் செயலாளர் வே. குணசீலன் விடுத்துள்ள கோரிக்கை மனுவில் "தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் பொதுமக்கள் மற்றும் வணிகர்களின் நலனுக்கு எதிராகப் போடப்பட்ட பேருந்து நிலையக் கட்டிடத் திட்டத்தால் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசலும் வர்த்தகப் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.
முறைகேடுகளுடன் கட்டப்பட்டதாகக் கூறப்படும் இந்தக் கட்டிடத்தை தற்போது இடித்துவிட்டு மீண்டும் புதிதாகக் கட்டுவது அரசு நிதி வீணாக வழிவகுக்கும். எனவே, பொதுமக்கள் மற்றும் வணிகர்களின் நலனைக் கருத்திற்கொண்டு, உடன்குடி பேருந்து நிலையக் கட்டிடத்தை இடிக்கும் திட்டத்தைத் தமிழக அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும். பொதுமக்களும், வியாபாரிகளும் பாதிக்காத வகையில் தமிழக முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காதலிக்க மறுத்ததால் ஆத்திரம்: வீடு புகுந்து தாய், மகள் மீது தாக்குதல் நடத்திய வாலிபர் கைது!
ஞாயிறு 9, ஆகஸ்ட் 2026 9:10:12 AM (IST)

தூத்துக்குடி திரேஸ்புரத்தில் மீன்கள் வரத்து குறைவு : கூடுதல் விலைக்கு விற்பனை; மீனவர்கள் மகிழ்ச்சி!
ஞாயிறு 9, ஆகஸ்ட் 2026 9:07:23 AM (IST)

விமர்சனங்களை அடக்குமுறையால் எதிர்கொள்ளக் கூடாது: தூத்துக்குடியில் ஆர்.பி. உதயகுமார் பேட்டி!
ஞாயிறு 9, ஆகஸ்ட் 2026 8:55:48 AM (IST)

தவெக அரசு என்னைத் தீவிரவாதியைப் போல நடத்தியது: ஜீ.வி. மாா்க்கண்டேயன் எம்எல்ஏ பேட்டி
ஞாயிறு 9, ஆகஸ்ட் 2026 8:51:15 AM (IST)

த.வெ.க. புதிய மாவட்ட செயலளாராக அமைச்சர் ஸ்ரீநாத் நியமனம்!
சனி 8, ஆகஸ்ட் 2026 10:21:54 PM (IST)

தொகுதி மறுவரையறை கூட்டம் திசைதிருப்பும் நாடகம் : கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு!
சனி 8, ஆகஸ்ட் 2026 8:17:18 PM (IST)








