» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தொகுதி மறுவரையறை கூட்டம் திசைதிருப்பும் நாடகம் : கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு!
சனி 8, ஆகஸ்ட் 2026 8:17:18 PM (IST)
தமிழகத்தில் மேக்கேதாட்டு பிரச்சினையிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் நோக்கத்திலேயே தவெக தலைமையிலான அரசு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தைக் கூட்டியுள்ளது என்று திமுக எம்.பி. கனிமொழி குற்றம் சாட்டினார்.
மத்திய பாஜக அரசு நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற ஆலோசித்து வருகிறது. இதனால் தென் மாநிலங்களில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்ற அச்சம் நிலவி வரும் சூழலில், இதுகுறித்து முடிவெடுக்கத் தமிழக எம்.பி.க்களுடன் சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி கூறியதாவது: "திமுக கூட்டணியைச் சார்ந்த 32 எம்.பி.க்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. தொகுதி வரையறை தொடர்பாகக் கூட்டப்பட்ட இந்தக் கூட்டத்தின் முடிவு குறித்து இன்னமும் தெளிவான தகவல் ஏதும் வெளியாகவில்லை. தமிழகத்தில் தீவிரமாக இருக்கும் மேக்கேதாட்டு பிரச்சினையிலிருந்து கவனத்தை திசை திருப்பும் நோக்கத்திலேயே இந்த எம்.பி.க்கள் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
நாங்கள் தொகுதி மறுவரையறைக்கு முழுமையாக எதிரானவர்கள் அல்லர்; நியாயமான முறையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட வேண்டும் என்பதையே கோருகிறோம். தேர்தலின் போது, தேர்தல் வெற்றியை விடத் தமிழ்நாட்டைப் பாதுகாப்பதே முக்கியம் என்பதைத் தெளிவுபடுத்தியிருந்தோம். தேர்தலில் வெற்றி பெறுவதை விடத் தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதே எங்களின் முக்கிய நோக்கம்.
தற்போது தமிழக அரசின் தலைமைச் செயலாளர், தவெக தலைமையகத்தின் செயலாளரைப் போலச் செயல்பட்டு வருகிறார். நாடாளுமன்ற உறுப்பினர்களை நேரடியாக அழைப்பதும், கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கடிதம் அனுப்புவதையும் அவரே செய்து வருகிறார்" என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காதலிக்க மறுத்ததால் ஆத்திரம்: வீடு புகுந்து தாய், மகள் மீது தாக்குதல் நடத்திய வாலிபர் கைது!
ஞாயிறு 9, ஆகஸ்ட் 2026 9:10:12 AM (IST)

தூத்துக்குடி திரேஸ்புரத்தில் மீன்கள் வரத்து குறைவு : கூடுதல் விலைக்கு விற்பனை; மீனவர்கள் மகிழ்ச்சி!
ஞாயிறு 9, ஆகஸ்ட் 2026 9:07:23 AM (IST)

விமர்சனங்களை அடக்குமுறையால் எதிர்கொள்ளக் கூடாது: தூத்துக்குடியில் ஆர்.பி. உதயகுமார் பேட்டி!
ஞாயிறு 9, ஆகஸ்ட் 2026 8:55:48 AM (IST)

தவெக அரசு என்னைத் தீவிரவாதியைப் போல நடத்தியது: ஜீ.வி. மாா்க்கண்டேயன் எம்எல்ஏ பேட்டி
ஞாயிறு 9, ஆகஸ்ட் 2026 8:51:15 AM (IST)

த.வெ.க. புதிய மாவட்ட செயலளாராக அமைச்சர் ஸ்ரீநாத் நியமனம்!
சனி 8, ஆகஸ்ட் 2026 10:21:54 PM (IST)

தூத்துக்குடியில் வளர்ச்சித் திட்டப் பணிகள்: மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முரளிதரன் ஆய்வு!
சனி 8, ஆகஸ்ட் 2026 5:55:52 PM (IST)








