» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
விமர்சனங்களை அடக்குமுறையால் எதிர்கொள்ளக் கூடாது: தூத்துக்குடியில் ஆர்.பி. உதயகுமார் பேட்டி!
ஞாயிறு 9, ஆகஸ்ட் 2026 8:55:48 AM (IST)
ஜனநாயக முறையில் முன்வைக்கப்படும் விமர்சனங்களை அடக்குமுறையைக் கொண்டு எதிர்கொள்ளக் கூடாது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் நடைபெற்ற அதிமுக ஜெயலலிதா பேரவை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர், அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது: "தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் பெயர் மாற்றங்களைத் தவிர வேறு புதிய திட்டங்கள் எதுவும் இல்லை. அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மடிக்கணினி, இலவச மிதிவண்டி உள்ளிட்ட திட்டங்களுக்குத் தவெக அரசு பெயர் மாற்றம் மட்டுமே செய்துள்ளது.ஆண்டுக்கு 6 இலவசச் சமையல் எரிவாயு உருளைகள், மகளிருக்கு மாதம் ரூ. 2,500, அனைத்துப் பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசப் பயணம், பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ. 4,000 போன்ற தேர்தல் வாக்குறுதிகள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை.
நடப்பு நிதியாண்டில் ரூ. 1.22 லட்சம் கோடி கடன் வாங்க அரசு திட்டமிட்டுள்ளதும், ஏற்கனவே கடந்த 3 மாதங்களில் நடைமுறைச் செலவுகளுக்காக ரூ. 22 ஆயிரம் கோடி கடன் வாங்கியிருப்பதும் தமிழகத்தின் நிதி நிலைமை குறித்த பெரும் கேள்வியை எழுப்புகிறது. கொரோனா பாதிப்பு காலத்தில் கூட எடப்பாடி கே. பழனிசாமி மிகச் சிறந்த முறையில் நிதி நிர்வாகத்தைச் செய்தார்.
குறுவை சாகுபடி சிறப்புத் தொகுப்பிற்கும், வறட்சி நிவாரணத்திற்கும் உள்ள வேறுபாடு கூடத் தெரியாத வகையில் தவெக அரசின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. ஜனநாயகத்தில் விமர்சனங்களை அடக்குமுறையால் எதிர்கொள்ளக் கூடாது. அரசையோ தலைவர்களையோ அவதூறாகப் பேசியிருந்தால் சட்டப்படி வழக்குத் தொடர்ந்து எதிர்கொள்ளலாம்.
எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் அதிமுக கூட்டணி மிகவும் வலிமையாக உள்ளது. மீண்டும் அதிமுக ஆட்சி அமையக் கட்சியினர் தொடர்ந்து களப்பணியாற்ற வேண்டும். என்று அவர் பேசினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காதலிக்க மறுத்ததால் ஆத்திரம்: வீடு புகுந்து தாய், மகள் மீது தாக்குதல் நடத்திய வாலிபர் கைது!
ஞாயிறு 9, ஆகஸ்ட் 2026 9:10:12 AM (IST)

தூத்துக்குடி திரேஸ்புரத்தில் மீன்கள் வரத்து குறைவு : கூடுதல் விலைக்கு விற்பனை; மீனவர்கள் மகிழ்ச்சி!
ஞாயிறு 9, ஆகஸ்ட் 2026 9:07:23 AM (IST)

தவெக அரசு என்னைத் தீவிரவாதியைப் போல நடத்தியது: ஜீ.வி. மாா்க்கண்டேயன் எம்எல்ஏ பேட்டி
ஞாயிறு 9, ஆகஸ்ட் 2026 8:51:15 AM (IST)

த.வெ.க. புதிய மாவட்ட செயலளாராக அமைச்சர் ஸ்ரீநாத் நியமனம்!
சனி 8, ஆகஸ்ட் 2026 10:21:54 PM (IST)

தொகுதி மறுவரையறை கூட்டம் திசைதிருப்பும் நாடகம் : கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு!
சனி 8, ஆகஸ்ட் 2026 8:17:18 PM (IST)

தூத்துக்குடியில் வளர்ச்சித் திட்டப் பணிகள்: மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முரளிதரன் ஆய்வு!
சனி 8, ஆகஸ்ட் 2026 5:55:52 PM (IST)








