» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் வளர்ச்சித் திட்டப் பணிகள்: மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முரளிதரன் ஆய்வு!

சனி 8, ஆகஸ்ட் 2026 5:55:52 PM (IST)



தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் முக்கிய வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கே.வி. முரளிதரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் வேளாண்மை இயக்குநருமான கே.வி. முரளிதரன் தலைமையில், மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் முன்னிலையில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று (08.08.2026) நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் வேளாண்மை இயக்குநருமான கே.வி. முரளிதரன் தலைமையில், மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் முன்னிலையில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று (08.08.2026) நடைபெற்றது.

ஆய்வுக் கூட்டத்திற்கு முன்பாக, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் முக்கிய வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நேரில் சென்று பார்வையிட்டார்: சி.வ. அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மழைநீர் வெளியேற்றும் வசதி, தனசேகர் நகரில் ரூ.9.85 கோடி மதிப்பீட்டிலான புதிய நூலகக் கட்டடப் பணி, அசோக் நகரில் ரூ.53.70 கோடி மதிப்பீட்டிலான பக்கிள் ஓடை அபிவிருத்திப் பணி மற்றும் நிக்லேசன் நகரில் ரூ.153.29 கோடி மதிப்பீட்டிலான பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகளைப் பார்வையிட்டார்.

அத்திமரப்பட்டியில் ரூ.20.48 கோடி மதிப்பீட்டில் கோரம்பள்ளம் கண்மாய் தூர்வாரும் பணி மற்றும் அயன்அடைப்பு அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் பல் தொழில் நுட்பப் பாதுகாப்பு மையக் கட்டடப் பணிகளை ஆய்வு செய்தார்.

ஓட்டப்பிடாரம் சிப்காட் தொழில் பூங்காவில் 'வின்ஃபாஸ்ட்' (Vinfast) நிறுவனத்தின் திட்டப் பணிகள், புதியம்புத்தூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவச் சேவைகள் மற்றும் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் புதியம்புத்தூர் ஜவுளி பூங்கா பணிகளைப் பார்வையிட்டார்.

தோட்டக்கலைத்துறை சார்பில் சொட்டுநீர் பாசன வாழை சாகுபடி, பாஞ்சாலங்குறிச்சியில் ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டப் பணிகள், துரைசாமிபுரத்தில் பண்ணைக்குட்டை அமைக்கும் பணிகளை ஆய்வு செய்ததோடு, பாஞ்சாலங்குறிச்சி காலனியில் விவசாயிகளுக்கு மண்வள அட்டைகளை வழங்கினார். மேலும், சமூக நீதி மாணவியர் விடுதியில் உணவுத் தரம் மற்றும் உட்கட்டமைப்பைச் ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் சி. பிரியங்கா, மாவட்ட வருவாய் அலுவலர் மூ. குருச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா. சரவணன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் கிருஷ்ணகுமார், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பென்னட் ஆசீர் உள்ளிட்ட துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads









Thoothukudi Business Directory