» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தவெக அரசு என்னைத் தீவிரவாதியைப் போல நடத்தியது: ஜீ.வி. மாா்க்கண்டேயன் எம்எல்ஏ பேட்டி

ஞாயிறு 9, ஆகஸ்ட் 2026 8:51:15 AM (IST)



கைது நடவடிக்கைகள் மூலமாக திமுகவினரை முடக்கி விட முடியாது. தவெக அரசு என்னைத் தீவிரவாதியைப் போல நடத்தியது என்று ஜீ.வி. மாா்க்கண்டேயன் எம்எல்ஏ கூறினார். 

தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யை விமர்சித்ததாகக் கைது செய்யப்பட்டு, நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நபர், தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் நேற்று கையொப்பமிட்டார். பின்னர், காவல் நிலைய வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது: "கைது நடவடிக்கைகள் மூலமாக திமுகவினரை முடக்கி விட முடியாது. தவெக அரசு என்னைத் தீவிரவாதியைப் போல நடத்தியது. தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் பொதுமக்கள் எதிர்பார்த்த திட்டங்களோ அல்லது தேர்தல் வாக்குறுதிகளில் அறிவிக்கப்பட்ட திட்டங்களோ இடம்பெறவில்லை.

சட்டப்பேரவைக் கூட்டத்தின் போது முதல்வரை நீங்கள் அவதூறாகப் பேசியிருக்கிறீர்கள் என்று கூறினார்கள். அதற்கான விளக்கத்தை நான் தெளிவாகத் தெரிவித்துள்ளேன். முதல்வர் பக்குவமாக நடந்துகொண்டால் எந்தப் பிரச்சினையும் இருக்காது. தற்போது தமிழகத்தில் முதலீடுகள் வெகுவாகக் குறைந்துள்ளன. சுமார் 75 சதவீத முதலீடுகள் மேற்கு வங்கம், ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்குச் சென்றுவிட்டன" என்று அவர் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads









Thoothukudi Business Directory