» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி அஞ்சலகங்களில் தேசியக் கொடி விற்பனை : சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடு!
சனி 8, ஆகஸ்ட் 2026 3:35:18 PM (IST)
நாட்டின் 80 வது சுதந்திர தின விழா வரும் ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்பட இருப்பதை முன்னிட்டு அஞ்சல் அலுவலகங்களில் தேசியக் கொடி விற்பனை நடைபெற்று வருகிறது.
ஒரு தேசியக் கொடியின் விலை ரூ 25/- ஆகும். பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும், அரசு மற்றும் தனியார் துறை அலுவலர்களும், வணிகர்களும் எளிதாக மூவர்ணக்கொடியை வாங்கி பயன் பெறும் வகையில் கிராமப்புற அஞ்சல் அலுவலங்கள் உட்பட அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் செய்யப்பட்டுள்ள இந்த சிறப்பு ஏற்பாட்டை அனைவரும் பயன்படுத்தி கொள்ளலாம்.
கிராமப்புற அஞ்சலகங்கள் உட்படத் தூத்துக்குடி அஞ்சல் கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் ஒரு தேசியக் கொடி ரூ. 25/- என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. தேசியக் கொடிகளுக்கான மொத்தத் தேவை ஏதேனும் இருப்பின், 9841875710, 9791655030 என்ற தொலைபேசி எண்களைத் தொடர்புகொண்டு பெற்றுக் கொள்ளலாம்.
எனவே, பொதுமக்கள் அனைவரும் இந்தச் சிறப்பு ஏற்பாட்டைப் பயன்படுத்தித் தேசியக் கொடிகளை வாங்கித் தங்கள் வீடுகளிலும் அலுவலகங்களிலும் ஏற்றிச் சுதந்திர தினத்தைக் கொண்டாடுமாறு தூத்துக்குடி அஞ்சல் கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காதலிக்க மறுத்ததால் ஆத்திரம்: வீடு புகுந்து தாய், மகள் மீது தாக்குதல் நடத்திய வாலிபர் கைது!
ஞாயிறு 9, ஆகஸ்ட் 2026 9:10:12 AM (IST)

தூத்துக்குடி திரேஸ்புரத்தில் மீன்கள் வரத்து குறைவு : கூடுதல் விலைக்கு விற்பனை; மீனவர்கள் மகிழ்ச்சி!
ஞாயிறு 9, ஆகஸ்ட் 2026 9:07:23 AM (IST)

விமர்சனங்களை அடக்குமுறையால் எதிர்கொள்ளக் கூடாது: தூத்துக்குடியில் ஆர்.பி. உதயகுமார் பேட்டி!
ஞாயிறு 9, ஆகஸ்ட் 2026 8:55:48 AM (IST)

தவெக அரசு என்னைத் தீவிரவாதியைப் போல நடத்தியது: ஜீ.வி. மாா்க்கண்டேயன் எம்எல்ஏ பேட்டி
ஞாயிறு 9, ஆகஸ்ட் 2026 8:51:15 AM (IST)

த.வெ.க. புதிய மாவட்ட செயலளாராக அமைச்சர் ஸ்ரீநாத் நியமனம்!
சனி 8, ஆகஸ்ட் 2026 10:21:54 PM (IST)

தொகுதி மறுவரையறை கூட்டம் திசைதிருப்பும் நாடகம் : கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு!
சனி 8, ஆகஸ்ட் 2026 8:17:18 PM (IST)








