» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அருகே கார் மோதி வடமாநில வாலிபர் பலி!

சனி 8, ஆகஸ்ட் 2026 11:58:58 AM (IST)

தூத்துக்குடி அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது கார் மோதிய விபத்தில் வடமாநில வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

உத்தரப் பிரதேச மாநிலம் பீச்சபூர், அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாயராம் மகன் போலநாத் (30). இவர் தூத்துக்குடி பகுதியில் நடைபெற்று நெடுஞ்சாலை ஒப்பந்தப் பணியில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு இவர் பணி முடிந்து சாலையின் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். 

அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த ஸ்கார்பியோ கார் போலநாத் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த புதுக்கோட்டை போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டுச் சென்ற கார் மற்றும் ஓட்டுநர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads









Thoothukudi Business Directory