» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அங்கன்வாடி மையத்தில் பூட்டை உடைத்து பொருட்கள் கொள்ளை: மர்ம நபர்கள் கைவரிசை!

சனி 8, ஆகஸ்ட் 2026 11:41:38 AM (IST)

தூத்துக்குடியில், பூட்டை உடைத்து அங்கன்வாடி மையத்தில் டி.வி. செட்டப் பாக்ஸ், விளையாட்டு பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி சின்னமணி நகர் பூங்கா அருகே மில்லர்புரம் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. தற்போது அங்கன்வாடி மையத்தின் மேற்கூரை சேதமடைந்து காணப்பட்டதால், அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் பாதுகாப்பிற்காக அருகே பயன்பாடடின்றி இருக்கும் மாநகராட்சி சமையல் எரிவாயு கூடத்தில் பூட்டி வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், இன்று காலை சுமார் 7 மணியளவில் அங்கன்வாடி உதவியாளர் சாந்தி (45) மற்றும் பணியாளர் சுசிலா ஆகியோர் வந்து பார்த்தபோது, சமையல் எரிவாயு கூடத்தின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ வெளியே எடுத்து வைக்கப்பட்டிருந்ததுடன் பொருட்கள் திருடப்பட்டிருந்தது.

இதில், குழந்தைகளின் விளையாட்டு பொருட்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் 2 மூட்டைகள், டி.வி. ரிமோட், மோடம், செட்டப் பாக்ஸ் மற்றும் ஸ்டெபிலைசர் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து  தகவலின் பேரில் தென்பாகம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads









Thoothukudi Business Directory