» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மது குடிக்க மனைவி பணம் தராததால் வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை: தூத்துக்குடியில் சோகம்!
சனி 8, ஆகஸ்ட் 2026 11:33:57 AM (IST)
தூத்துக்குடியில், மது குடிப்பதற்கு பணம் தராததால் மனைவியுடன் தகராறு செய்து, வீட்டின் கதவை உட்புறமாகப் பூட்டிக்கொண்டு வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி முத்துக்கிருஷ்ணாபுரம், அய்யாதுரை காம்பவுண்ட் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து (40). வேலைக்கு எதுவும் செல்லாமல் இருந்த இவர், தீவிரக் குடிப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று அவர் தனது மனைவி முத்துலட்சுமியிடம் மது குடிப்பதற்குப் பணம் கேட்டுச் சண்டையிட்டுள்ளார்.
அதற்கு மனைவி பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த இசக்கிமுத்து, மனைவியையும் குழந்தைகளையும் வீட்டை விட்டு வெளியே தள்ளிவிட்டு உள்ளே பூட்டிக்கொண்டார். நீண்ட நேரமாகியும் கணவர் கதவைத் திறக்காததால், முத்துலட்சுமி தனது குழந்தைகளுடன் அருகில் உள்ள பாட்டி வீட்டிற்குச் சென்றுவிட்டார்.
மீண்டும் இன்று காலை மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோதும் கதவு உட்புறமாகப் பூட்டப்பட்டே இருந்தது. சந்தேகமடைந்து அருகிலிருந்த ஜன்னல் வழியாகப் பார்த்தபோது, இசக்கிமுத்து வீட்டில் உள்ள சீலிங் கம்பியில் சேலையால் தூக்கிட்டுத் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக வீட்டின் பின்பக்கக் கதவைத் தள்ளி உள்ளே சென்று பார்த்தபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீசார் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காதலிக்க மறுத்ததால் ஆத்திரம்: வீடு புகுந்து தாய், மகள் மீது தாக்குதல் நடத்திய வாலிபர் கைது!
ஞாயிறு 9, ஆகஸ்ட் 2026 9:10:12 AM (IST)

தூத்துக்குடி திரேஸ்புரத்தில் மீன்கள் வரத்து குறைவு : கூடுதல் விலைக்கு விற்பனை; மீனவர்கள் மகிழ்ச்சி!
ஞாயிறு 9, ஆகஸ்ட் 2026 9:07:23 AM (IST)

விமர்சனங்களை அடக்குமுறையால் எதிர்கொள்ளக் கூடாது: தூத்துக்குடியில் ஆர்.பி. உதயகுமார் பேட்டி!
ஞாயிறு 9, ஆகஸ்ட் 2026 8:55:48 AM (IST)

தவெக அரசு என்னைத் தீவிரவாதியைப் போல நடத்தியது: ஜீ.வி. மாா்க்கண்டேயன் எம்எல்ஏ பேட்டி
ஞாயிறு 9, ஆகஸ்ட் 2026 8:51:15 AM (IST)

த.வெ.க. புதிய மாவட்ட செயலளாராக அமைச்சர் ஸ்ரீநாத் நியமனம்!
சனி 8, ஆகஸ்ட் 2026 10:21:54 PM (IST)

தொகுதி மறுவரையறை கூட்டம் திசைதிருப்பும் நாடகம் : கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு!
சனி 8, ஆகஸ்ட் 2026 8:17:18 PM (IST)









காரணம்Aug 8, 2026 - 06:22:17 PM | Posted IP 172.7*****