» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நெல்லை - தூத்துக்குடி சாலையில் பாலம் மீது கார் மோதி விபத்து : தம்பதி உள்பட 4 பேர் படுகாயம்!
சனி 8, ஆகஸ்ட் 2026 11:26:00 AM (IST)
நெல்லை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தின் மீது மோதிய விபத்தில் கணவன், மனைவி உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு கோவில்பத்து பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (36) என்பவர் ஓட்டி வந்த பாலேனோ காரில் அதே பகுதியைச் சேர்ந்த சக்தி (24), திருநெல்வேலி காசிநாதபுரத்தைச் சேர்ந்த சங்கரன் (60) மற்றும் அவரது மனைவி லட்சுமி (55) ஆகியோர் திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.
இன்று காலை சுமார் 6.30 மணியளவில் வல்லநாடு பகுதிக்கு அருகே கார் சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநர் கார்த்திக்கிற்குத் திடீரெனத் தூக்கக் கலக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் நடுவே இருந்த வாய்க்கால் பாலத்தின் மீது பலத்த சத்தத்துடன் பலமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்தக் கொடூர விபத்தில் காரில் பயணித்த 4 பேரும் பலத்த காயமடைந்தனர். இதில், சங்கரன் மற்றும் லட்சுமி ஆகிய இருவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இச்சம்பவம் குறித்து முறைப்பநாடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காதலிக்க மறுத்ததால் ஆத்திரம்: வீடு புகுந்து தாய், மகள் மீது தாக்குதல் நடத்திய வாலிபர் கைது!
ஞாயிறு 9, ஆகஸ்ட் 2026 9:10:12 AM (IST)

தூத்துக்குடி திரேஸ்புரத்தில் மீன்கள் வரத்து குறைவு : கூடுதல் விலைக்கு விற்பனை; மீனவர்கள் மகிழ்ச்சி!
ஞாயிறு 9, ஆகஸ்ட் 2026 9:07:23 AM (IST)

விமர்சனங்களை அடக்குமுறையால் எதிர்கொள்ளக் கூடாது: தூத்துக்குடியில் ஆர்.பி. உதயகுமார் பேட்டி!
ஞாயிறு 9, ஆகஸ்ட் 2026 8:55:48 AM (IST)

தவெக அரசு என்னைத் தீவிரவாதியைப் போல நடத்தியது: ஜீ.வி. மாா்க்கண்டேயன் எம்எல்ஏ பேட்டி
ஞாயிறு 9, ஆகஸ்ட் 2026 8:51:15 AM (IST)

த.வெ.க. புதிய மாவட்ட செயலளாராக அமைச்சர் ஸ்ரீநாத் நியமனம்!
சனி 8, ஆகஸ்ட் 2026 10:21:54 PM (IST)

தொகுதி மறுவரையறை கூட்டம் திசைதிருப்பும் நாடகம் : கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு!
சனி 8, ஆகஸ்ட் 2026 8:17:18 PM (IST)








