» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சிப்காட் நில எடுப்பில் பல லட்சம் முறைகேடு?: தூத்துக்குடி ஆட்சியரிடம் பரபரப்புப் புகார்!

சனி 8, ஆகஸ்ட் 2026 11:10:00 AM (IST)

தூத்துக்குடி மாவட்டம் வெம்பூர் சிப்காட் தொழிற்பூங்கா நில எடுப்புப் பணிகளில் போலி ஆவணங்களைத் தயாரித்துப் பல லட்ச ரூபாய் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியரிடம் சமூகச் செயற்பாட்டாளர் கப்பிக்குளம் சு. பாபு புகார் மனு அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில், எட்டயபுரம் வருவாய் வட்டாட்சியர் அலுவலக மேல் தளத்தில் இயங்கி வரும் வெம்பூர் சிப்காட் நில எடுப்பு அலுவலகத்தில், கடந்த இரண்டரை ஆண்டுகளாக நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றி வரும் நாகராஜன் என்பவர் நில எடுப்பு தொடர்பான பட்டா மற்றும் பத்திரப் பதிவுகளைச் சரிபார்க்காமல், தனியார் நிறுவனங்களுக்குச் சாதகமாகச் செயல்பட்டு உண்மை உரிமையாளர்கள் அல்லாத நபர்களுக்குப் போலி ஆவணங்கள் தயாரித்துப் பணப்பட்டுவாடா செய்துள்ளதாகப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதில் அவருக்கும், தொடர்புடைய நில எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலருக்கும் ஆதாயப் பங்கு கைமாறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 31 அன்று தனியார் நிறுவன ஊழியர்கள் மூலம் எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் வைத்து அதிகாரிகளுக்குப் பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாகவும், வட்டாட்சியர் அலுவலக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தால் இதன் உண்மைத்தன்மை தெரியவரும் .

மேலும், வெம்பூர் கிராமத்தில் ராஜேந்திர பிரசாத் என்பவருக்குச் சொந்தமான நிலத்திற்கு முறைகேடாக வேறு நபர்களுக்கு ரூ.8 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுப் பங்கு பிரிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக ஆகஸ்ட் 6 அன்று மாசார்பட்டி காவல் நிலையத்தில் வாய்மொழிப் புகாரும் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்றுள்ளது.

போலி ஆவணங்கள் மூலம் சுமார் ரூ.50 லட்சத்திற்கும் மேல் முறைகேடு நடந்துள்ளதாகக் குறிப்பிட்ட சமூகச் செயற்பாட்டாளர் கப்பிக்குளம் சு. பாபு, இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையும் மாவட்ட நிர்வாகமும் விரிவான விசாரணை நடத்த வேண்டும்.

கடந்த இரண்டரை ஆண்டுகளில் நடைபெற்ற நில எடுப்புக் கோப்புகளை முழுமையாக ஆய்வு செய்து, முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரி நாகராஜன் மற்றும் அதற்குத் துணைபோன அலுவலர்கள் மீது உடனடியாகக் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் வலியுறுத்தியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads









Thoothukudi Business Directory