» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆகஸ்ட் 8-ல் மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!

வியாழன் 6, ஆகஸ்ட் 2026 4:49:31 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 8ஆம் தேதி விளாத்திகுளம், குளத்தூர், சூரங்குடி துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.  

தூத்துக்குடி ஊரகக் கோட்டத்திற்குட்பட்ட உபமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், வருகிற 08.08.2026 (சனிக்கிழமை) அன்று காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை சில பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் செயற்பொறியாளர் சின்னத்துரை அறிவித்துள்ளார்.

மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்:

1. விளாத்திகுளம் உபமின் நிலையம்: 

விளாத்திகுளம், மந்திகுளம், செங்கல்படை, கமலாபுரம், பிள்ளையார்நத்தம், பேரிலோவன்பட்டி, அயன்பொம்மையாபுரம், ராமசந்திராபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஊர்கள்.

2. குளத்தூர் உபமின் நிலையம்:

குளத்தூர், கீழவைப்பார், வைப்பார், வேப்ப‌லோடை, மார்த்தாண்டம்பட்டி, முள்ளூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஊர்கள்.

3. சூரங்குடி உபமின் நிலையம்:

மேல்மாந்தை, ஈ.வேலாயுதபுரம், வேம்பார், பச்சையாபுரம், அரியநாயகிபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களில் காலை 09.00 மணி முதல் மாலை 4.00 மணி) வரை மின் விநியோகம் இருக்காது.

எனவே, பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் இந்த மின்நிறுத்த அறிவிப்பைக் கருத்தில் கொண்டு தேவையான முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads









Thoothukudi Business Directory