» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கட்டுமானப் பணியில் 3வது மாடியில் இருந்து தவறி விழுந்த கொத்தனார் பலி - தூத்துக்குடியில் பரிதாபம்!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 11:12:42 AM (IST)
தூத்துக்குடியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் 3-வது மாடியில் வேலையில் ஈடுபட்டிருந்தபோது தவறி கீழே விழுந்த கொத்தனார், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி செல்சினி காலனியைச் சேர்ந்தவர் சுயம்புலிங்கம் மகன் சிவா (35). கொத்தனாரான இவர், நேற்று தூத்துக்குடி வள்ளிநாயகபுரம் 2-வது தெருவில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் வீடு ஒன்றில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். வீட்டின் 3-வது மாடியில் சாரம் அமைத்து கொத்த வேலை செய்துகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாகச் சிவா கால்தவறி கீழே விழுந்தார்.
இதில் அவருக்குத் தலை மற்றும் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. அவரை அக்கம் பக்கத்தினர் மற்றும் சக தொழிலாளர்கள் உடனடியாக மீட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துதென்பாகம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாசரேத்தில் மனநல பாதிப்பிலிருந்து மீண்ட டெல்லி வாலிபர் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 8:10:40 PM (IST)

தவெக அரசின் பட்ஜெட் கானல் நீர் போன்றது: சட்டமன்றத்தில் மார்க்கண்டேயன் விமர்சனம்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:18:42 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவில் ஸ்ரீ துர்க்கை அம்பிகைக்கு 55-ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா கோலாகலம்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 4:12:51 PM (IST)

கலை விருதுகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு : ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 3:49:28 PM (IST)

திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் வியாபாரி தீக்குளித்து தற்கொலை முயற்சி!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 3:31:17 PM (IST)

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் நலத்திட்டங்கள் : ஆட்சியர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 3:23:03 PM (IST)








