» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் குறித்து நல்ல முடிவு எடுக்கப்படும்: அமைச்சர் ஸ்ரீநாத் தகவல்!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 8:00:16 AM (IST)
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் அமைப்பது குறித்து முதலமைச்சருடன் கலந்தாலோசித்து விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஏ.
தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தின் ஆண்டுத் திருவிழாவை முன்னிட்டு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஏ. ஸ்ரீநாத் நேற்று மாலையில் ஆலயத்திற்கு வருகை தந்து சிறப்பு வழிபாடு செய்தார். அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பொதுமக்கள் அனைவருக்கும் பனிமய மாதா ஆலய திருவிழா வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் பேசியதாவது: மீன்பிடி குறைவான காலத்திற்கான நிவாரணத் தொகை ₹6,000-லிருந்து ₹7,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 1.93 லட்சம் மீனவக் குடும்பங்கள் பயனடைவர். இதற்காக ₹135 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடும் விசைப்படகு மீனவர்களுக்கு மானியக் கடன் வழங்குவதற்காக ₹12 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தின் நிதி நிலைமையைப் பொறுத்து மீனவர்களுக்கான கூடுதல் நிவாரணத் தொகைகள் குறித்து முதலமைச்சர் அறிவிப்பார். மேலும், சட்டமன்றத்தில் மீன்வளத்துறை மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்படும்போது மீனவர்களுக்கான பல்வேறு புதிய நலத்திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும்.
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனும் தொழிலதிபர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இது குறித்து நாங்களும் முதலமைச்சரிடம் ஆலோசனை நடத்தியுள்ளோம். விரைவில் இதற்கான நல்ல முடிவு எடுக்கப்படும் என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாசரேத்தில் மனநல பாதிப்பிலிருந்து மீண்ட டெல்லி வாலிபர் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 8:10:40 PM (IST)

தவெக அரசின் பட்ஜெட் கானல் நீர் போன்றது: சட்டமன்றத்தில் மார்க்கண்டேயன் விமர்சனம்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:18:42 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவில் ஸ்ரீ துர்க்கை அம்பிகைக்கு 55-ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா கோலாகலம்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 4:12:51 PM (IST)

கலை விருதுகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு : ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 3:49:28 PM (IST)

திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் வியாபாரி தீக்குளித்து தற்கொலை முயற்சி!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 3:31:17 PM (IST)

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் நலத்திட்டங்கள் : ஆட்சியர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 3:23:03 PM (IST)








