» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி பக்கிள் ஓடையில் ஆண் சடலம் மீட்பு: காவல் துறையினர் தீவிர விசாரணை!

செவ்வாய் 28, ஜூலை 2026 12:30:16 PM (IST)

தூத்துக்குடி எஃப்.சி.ஐ ரவுண்டானா அருகே பக்கிள் ஓடையில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி எஃப்.சி.ஐ ரவுண்டானா ஆவின் பால் விற்பனையகம் அருகில் உள்ள பக்கிள் ஓடையில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாகத் தெற்கு காவல் நிலையத்திற்குத் தகவல் கிடைத்தது. தகவலறிந்த காவல்துறையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ஓடையில் கிடந்த சடலத்தை மீட்டு ஆய்வு செய்தனர். 

முதற்கட்ட ஆய்வில் அவரது உடலில் காயங்கள் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. விசாரணையில், உயிரிழந்தவர் தூத்துக்குடி ராஜகோபால் நகர் 4-வது தெருவைச் சேர்ந்த சுடலையாண்டி மகன் முருகானந்த் (60) என்பது கண்டறியப்பட்டது. இவருக்கு ரெங்கமணி என்ற மனைவியும், இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

இதையடுத்து, அவரது உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்துத் தெற்கு காவல் நிலையப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory