» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மேல்மாந்தை கல்லூரியில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நினைவு தினம் அனுசரிப்பு!
செவ்வாய் 28, ஜூலை 2026 12:05:54 PM (IST)

மேல்மாந்தை ஸ்ரீ பெத்தநாச்சி அம்மன் சமுதாயக் கல்லூரியில் மறைந்த முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 11-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
கல்லூரி இயக்குநர் கோடீஸ்வரன் வழிகாட்டுதலின்படி, கல்லூரி முதல்வர் ஆனந்த ரூபா தலைமையில், பேராசிரியைகளின் ஒருங்கிணைப்பில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில், கல்லூரி மாணவிகள் டாக்டர் அப்துல் கலாமின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி, மெழுகுவர்த்தி ஏந்தி உணர்ச்சிப்பூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவரின் நினைவைப் போற்றும் வகையில் கல்லூரி வளாகத்தில் பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும், அவரது உயரிய சிந்தனைகள், ஒழுக்கம், கல்வி சிந்தனை மற்றும் இலட்சியங்களைப் பின்பற்றிச் சமுதாயத்திற்குப் பயனுள்ள வகையில் வாழ்வதற்கான உறுதிமொழியையும் மாணவிகள் ஏற்றுக்கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஒரே நாளில் இருவருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை : தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சாதனை!
செவ்வாய் 28, ஜூலை 2026 12:44:18 PM (IST)

தூத்துக்குடி பக்கிள் ஓடையில் ஆண் சடலம் மீட்பு: காவல் துறையினர் தீவிர விசாரணை!
செவ்வாய் 28, ஜூலை 2026 12:30:16 PM (IST)

பைக் மீது டிப்பர் லாரி மோதி விபத்து கொத்தனார் பரிதாப பலி!
செவ்வாய் 28, ஜூலை 2026 12:23:45 PM (IST)

தெரு வியாபாரிகள் வாழ்வாதார பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்தக் கோரி தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்!
செவ்வாய் 28, ஜூலை 2026 12:15:25 PM (IST)

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணியிடங்கள் : விண்ணப்பிக்க ஆகஸ்ட் 3 கடைசி நாள்!
செவ்வாய் 28, ஜூலை 2026 11:52:45 AM (IST)

பூப்பந்தாட்டப் போட்டியில் ஹோலிகிராஸ் பள்ளி மாணவிகள் முதலிடம்: மாவட்ட போட்டிக்குத் தகுதி!
செவ்வாய் 28, ஜூலை 2026 11:32:54 AM (IST)








