» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பைக் மீது டிப்பர் லாரி மோதி விபத்து கொத்தனார் பரிதாப பலி!

செவ்வாய் 28, ஜூலை 2026 12:23:45 PM (IST)

ஸ்ரீவைகுண்டம் அருகே இன்று காலை வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது, பைக் மீது எதிரே வந்த டிப்பர் லாரி மோதிய விபத்தில் கொத்தனார் சம்பவ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே இசவன்குளம், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் முருகன் (42). கொத்தனார் வேலை செய்து வந்த இவர், இன்று காலையில் வழக்கம் போல் தனது இருசக்கர வாகனத்தில் வேலைக்காகச் சென்று கொண்டிருந்தார்.

அந்நியாபரநல்லூர் - மீனாட்சிபட்டி சாலையில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே அதிவேகமாக வந்த டிப்பர் லாரி எதிர்பாராதவிதமாக இவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இவ்விபத்தில் தூக்கி வீசப்பட்ட முருகனின் தலை மீது டிப்பர் லாரியின் டயர் ஏறி இறங்கியதில், அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த ஸ்ரீவைகுண்டம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory