» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழ்நாடு நாள் வாழ்த்து: மாநில உரிமைகளைக் காக்கக் கனிமொழி எம்பி அழைப்பு!

சனி 18, ஜூலை 2026 11:57:59 AM (IST)

KanimozhiTamilnadu.jpg

பேரறிஞர் அண்ணா தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய இந்நாளில், மாநிலத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான உறுதியை அனைவரும் ஏற்க வேண்டும் என்று கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு நாளை முன்னிட்டுத் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி தனது எக்ஸ் (X) சமூக ஊடகப் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பல்வேறு போராட்டங்கள் மற்றும் உயிர்த்தியாகங்களுக்குப் பிறகு அன்னைத் தமிழ் நிலத்திற்குத் 'தமிழ்நாடு' என்ற பெயர் மீட்டளிக்கப்பட்டதாக அந்தப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். திமுக ஆட்சியமைத்த போது பெற்ற அதிகாரத்தின் மூலமாகவே, இத்துணைக் கண்டத்தின் வரலாற்றை முழங்கும் இனமானச் சொல்லாகத் 'தமிழ்நாடு' என்ற பெயர் நிலைபெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பேரறிஞர் அண்ணா முறைப்படி தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய இந்நாளில், மாநிலத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான உறுதியை அனைவரும் ஏற்க வேண்டும் எனவும், தமிழ்நாடு எனும் தனிப்பெரும் அடையாளத்தை உலகளவில் நிலைநிறுத்த வேண்டும் எனவும் தனது பதிவில் கனிமொழி கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory