» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வீட்டின் கதவை உடைத்து 13 பவுன் நகை, ரூ.2 லட்சம் பணம் கொள்ளை - மர்ம நபர்கள் கைவரிசை!
சனி 18, ஜூலை 2026 11:39:35 AM (IST)
தட்டாரமடம் அருகே மிட்டாய் வியாபாரி வீட்டின் கதவை உடைத்து, 13 பவுன் தங்க நகைகள் மற்றும் 2 லட்ச ரூபாய் ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் தட்டாரமடம் சுப்பிரமணியபுரம், ராஜீவ் காந்தி நடுத்தெருவைச் சேர்ந்தவர் சௌந்தர்ராஜ் மகன் லிங்ககுமார் (27). இவர் அப்பகுதியில் மிட்டாய் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று இரவு 7:30 மணியளவில், லிங்ககுமார் தனது குடும்பத்தினருடன் வீட்டைப் பூட்டிவிட்டு, அருகில் உள்ள இசக்கி அம்மன் கோவில் திருவிழா வழிபாட்டிற்காகச் சென்றுள்ளார்.
பின்னர் அவர்கள் வீட்டிற்குத் திரும்பியுள்ளனர். அப்போது வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, அறையிலிருந்த பீரோவும் உடைக்கப்பட்டு, அதில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தன.
பீரோவின் உள்அறையில் வைக்கப்பட்டிருந்த 9 பவுன் தங்கச் சங்கிலி, 4 பவுன் தங்கச் சங்கிலி என மொத்தம் 13 பவுன் தங்க நகைகள் மற்றும் வியாபாரத்திற்காக வைத்திருந்த 2 லட்ச ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து லிங்ககுமார் அளித்த புகாரின் பேரில், தட்டாரமடம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், விரல் ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஒரே நாளில் இருவருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை : தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சாதனை!
செவ்வாய் 28, ஜூலை 2026 12:44:18 PM (IST)

தூத்துக்குடி பக்கிள் ஓடையில் ஆண் சடலம் மீட்பு: காவல் துறையினர் தீவிர விசாரணை!
செவ்வாய் 28, ஜூலை 2026 12:30:16 PM (IST)

பைக் மீது டிப்பர் லாரி மோதி விபத்து கொத்தனார் பரிதாப பலி!
செவ்வாய் 28, ஜூலை 2026 12:23:45 PM (IST)

தெரு வியாபாரிகள் வாழ்வாதார பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்தக் கோரி தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்!
செவ்வாய் 28, ஜூலை 2026 12:15:25 PM (IST)

மேல்மாந்தை கல்லூரியில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நினைவு தினம் அனுசரிப்பு!
செவ்வாய் 28, ஜூலை 2026 12:05:54 PM (IST)

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணியிடங்கள் : விண்ணப்பிக்க ஆகஸ்ட் 3 கடைசி நாள்!
செவ்வாய் 28, ஜூலை 2026 11:52:45 AM (IST)








