» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடி மாதப் பிறப்பு தீர்த்தவாரி: சிறப்பு அபிஷேகங்கள்!
சனி 18, ஜூலை 2026 8:52:19 AM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தமிழ் ஆடி மாதப் பிறப்பை முன்னிட்டுச் சிறப்பு வழிபாடுகள் மற்றும் சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்வு நடைபெற்றன.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடி மாதத் தொடக்கத்தையொட்டி கோயிலின் நடை அதிகாலை 5:00 மணிக்குத் திறக்கப்பட்டது. தொடர்ந்து காலை 5:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், காலை 6:00 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்றன. காலை 10:00 மணிக்கு உச்சிகால அபிஷேகம் மற்றும் தீபாராதனையுடன் இதர காலப் பூஜைகளும் வழக்கம்போல் நடத்தப்பட்டன.
பூஜைகளின் தொடர்ச்சியாகச் சுவாமி அஸ்திரதேவர் சண்முக விலாச மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு அவருக்குப் பல்வேறு வாசனைத் திரவியப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் பாரம்பரியத் தீர்த்தவாரி நிகழ்வு நடைபெற்றது. மாதப் பிறப்பையொட்டி அதிகாலை முதலே பொதுமக்கள் கடல் மற்றும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் நீராடி, வரிசையில் காத்திருந்து வழிபாடு மேற்கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஒரே நாளில் இருவருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை : தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சாதனை!
செவ்வாய் 28, ஜூலை 2026 12:44:18 PM (IST)

தூத்துக்குடி பக்கிள் ஓடையில் ஆண் சடலம் மீட்பு: காவல் துறையினர் தீவிர விசாரணை!
செவ்வாய் 28, ஜூலை 2026 12:30:16 PM (IST)

பைக் மீது டிப்பர் லாரி மோதி விபத்து கொத்தனார் பரிதாப பலி!
செவ்வாய் 28, ஜூலை 2026 12:23:45 PM (IST)

தெரு வியாபாரிகள் வாழ்வாதார பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்தக் கோரி தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்!
செவ்வாய் 28, ஜூலை 2026 12:15:25 PM (IST)

மேல்மாந்தை கல்லூரியில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நினைவு தினம் அனுசரிப்பு!
செவ்வாய் 28, ஜூலை 2026 12:05:54 PM (IST)

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணியிடங்கள் : விண்ணப்பிக்க ஆகஸ்ட் 3 கடைசி நாள்!
செவ்வாய் 28, ஜூலை 2026 11:52:45 AM (IST)








