» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூரில் அண்ணாமலையின் வீ த லீடர்ஸ் மாநாடு ரத்து: தூத்துக்குடியில் நடத்தத் திட்டம்!

புதன் 15, ஜூலை 2026 4:18:19 PM (IST)

AnnamalaiWtL.jpg

திருச்செந்தூரில் ஜூலை 26-ஆம் தேதி நடைபெற இருந்த 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் இரண்டாவது மாநாடு ரத்து செய்யப்பட்டுள்ளது.

பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவரும் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியுமான அண்ணாமலை, கட்சியிலிருந்து விலகி 'வீ த லீடர்ஸ்' என்ற இயக்கத்தை நிறுவினார். இந்த இயக்க உறுப்பினர்களை அரசியல் மயப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், இதன் முதல் மாநாடு ஜூலை 12-ஆம் தேதி கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 'போதையில்லா தமிழகம்' என்ற பெயரில் விழிப்புணர்வு மாநாடாக நடைபெற்றது. 

இதனைத் தொடர்ந்து, அமைப்பின் இரண்டாவது மாநாடு ஜூலை 26-ஆம் தேதி திருச்செந்தூரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திருச்செந்தூரில் திட்டமிடப்பட்டிருந்த மாநாடு ரத்து செய்யப்படுவதாக 'வீ த லீடர்ஸ்' அமைப்பு தெரிவித்துள்ளது. இம்மாநாட்டுக்கு மாற்றாகச் சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னிறுத்தி, இயற்கை மற்றும் சுற்றுப்புற விழிப்புணர்வு சார்ந்த சமூகநல நிகழ்வு ஆகஸ்ட் மாதத்தில் தூத்துக்குடியில் நடத்தப்பட உள்ளது. 

இந்தச் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்வு தட்டையான மாநாடாக இல்லாமல் சமூகநலப் பங்களிப்பாக அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வு நடக்கும் தேதி மற்றும் இடம் குறித்த விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என அமைப்பின் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory