» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழகத்தில் முழு மதுவிலக்கை உடனே அமல்படுத்த வேண்டும்: முதல்வர் விஜய்க்குச் சகோ.மோகன் சி. லாசரஸ் கோரிக்கை!

புதன் 15, ஜூலை 2026 10:48:40 AM (IST)

தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ச.ஜோசப் விஜய்க்கு, இயேசு விடுவிக்கிறார் ஊழியங்களின் நிறுவனர் சகோதரர் மோகன் சி. லாசரஸ் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் மதுப் பழக்கத்தினால் லட்சக்கணக்கான குடும்பங்கள் சீரழிந்து வருவதாகத் தெரிவித்துள்ள மோகன் சி. லாசரஸ், குறிப்பாக இளைய தலைமுறை மற்றும் மாணவர்கள் மது அரக்கனின் பிடியில் சிக்கித் தங்களது எதிர்காலத்தை இழந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். 

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் சுமார் ஒன்றரை கோடி மக்கள் குடிகாரர்களாக மாறி இருப்பதாக உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். மதுவினால், சாலை விபத்துகள், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பெருகுவதற்கு மதுவே முதன்மைக் காரணமாக உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய ஆட்சியை அமைத்துள்ள முதல்வர் ச.ஜோசப் விஜய், தமிழக மக்களின் நல்வாழ்வையும் எதிர்காலத் தலைமுறையினரின் ஒழுக்கத்தையும் கருத்தில் கொண்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக் கடைகளையும் படிப்படியாக மூடாமல் உடனடியாக முழுமையாக மூடி, மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என மோகன் சி. லாசரஸ் வலியுறுத்தியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory