» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பணம் வைத்துச் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது!

புதன் 13, மே 2026 11:09:22 AM (IST)

புதூர் அருகே மயானத்தில் சட்டவிரோதமாகப் பணம் வைத்துச் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்த பணத்தைப் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குளக்கட்டான்குறிச்சி சுடுகாடு பகுதியில் ஒரு கும்பல் பணம் வைத்துச் சூதாடுவதாகப் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், புதூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் துரைச்சாமி தலைமையிலான போலீசார் அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு பணம் வைத்துச் சூதாடிக்கொண்டிருந்த குளக்கட்டான்குறிச்சி கீழத்தெருவைச் சேர்ந்த முருகன் (48), முனியசாமி (57),  கணேசன் (46), லட்சுமணன் (47) ஆகிய 4பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சூதாட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்ட சீட்டுக்கட்டுகள் மற்றும் ரூபாய் 5,000/- ரொக்கப் பணம் ஆகியவற்றைப் போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து புதூர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital






Thoothukudi Business Directory