» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இளம்பெண்ணுக்கு கொலைமிரட்டல் விடுத்தவர் கைது!

வெள்ளி 15, மே 2026 8:58:07 AM (IST)

கயத்தாறு அருகே கோவில் கொடை விழாவின் போது இளம்பெண்ணுக்கு கொலைமிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம்,கயத்தாறு பேரூராட்சிக்கு உட்பட்ட புதுக்கோட்டை வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் (40), தொழிலாளி. இவருக்கும் இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் முனுசாமி என்பவரது குடும்பத்தினருக்கும் இடையே நீண்ட நாட்களாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் இரு குடும்பத்தாருக்கும் இடையே அடிக்கடி வாய்த்தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், அப்பகுதியில் உள்ள சந்திமரியம்மன் கோவில் கொடை விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான மஞ்சள் நீராட்டு ஊர்வலம் இரவு நேரத்தில் வடக்குத் தெரு வழியாகச் சென்று கொண்டிருந்தது. அப்போது பெருமாள் மற்றும் முனுசாமி ஆகிய இருவரது குடும்பத்தினரும் வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தனர்.

அப்போது மதுபோதையில் இருந்த பெருமாள், முனுசாமியின் மனைவி கனகலட்சுமியை அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனை கனகலட்சுமி தட்டிக்கேட்டதால் ஆத்திரமடைந்த பெருமாள், அவருக்குக் கொலைமிரட்டல் விடுத்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து கனகலட்சுமி அளித்த புகாரின் பேரில், கயத்தாறு காவல் உதவி ஆய்வாளர் காந்தி ராஜன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதன் அடிப்படையில், பெண்ணிற்கு அவதூறு மற்றும் கொலைமிரட்டல் விடுத்த குற்றத்திற்காகப் பெருமாளைப் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital





Thoothukudi Business Directory