» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் 7 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: வியாபாரி கைது!
செவ்வாய் 12, மே 2026 9:19:44 PM (IST)
தூத்துக்குடியில், அரசு தடை செய்த புகையிலை பொருட்களைச் சட்டவிரோதமாக விற்பனைக்கு வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 7 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் ரொக்கப் பணத்தைப் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடியில் வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட போல்பேட்டை பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாகப் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. அந்தோணி திலீப் மற்றும் போலீசார் இன்று (12.05.2026) அப்பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
சோதனையின் போது, போல்பேட்டை பகுதியைச் சேர்ந்த முத்துராஜ் (52) என்பவர் தனது பெட்டிக்கடையில் அரசு தடை செய்த புகையிலை பொருட்களைச் சட்டவிரோத விற்பனைக்காகப் பதுக்கி வைத்திருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் முத்துராஜைக் கைது செய்தனர். அவரிடமிருந்து 7 கிலோ 125 கிராம் எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், விற்பனை மூலம் கிடைத்த ரூபாய் 27,000/- ரொக்கப் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இச்சம்பவம் குறித்து வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பந்தை எடுக்கச் சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு : விடுமுறைக்கு வந்த இடத்தில் சோகம்!
வெள்ளி 15, மே 2026 12:28:40 PM (IST)

பொருளாதார நிலைத்தன்மையை காக்கவே விலை உயர்வு: பாஜக மாநிலச் செயலாளர் அன்னபூர்ணா விளக்கம்!
வெள்ளி 15, மே 2026 12:18:04 PM (IST)

காதல் திருமணம் செய்த இளைஞர் தற்கொலை!
வெள்ளி 15, மே 2026 12:10:25 PM (IST)

தூத்துக்குடி பூ மார்க்கெட் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: மாநகராட்சி நடவடிக்கை!
வெள்ளி 15, மே 2026 10:47:59 AM (IST)

தூத்துக்குடியில் மீனவர் படுகொலை: 4 பேர் கைது!
வெள்ளி 15, மே 2026 10:42:13 AM (IST)

தூத்துக்குடி போலீஸ் வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தம்: எஸ்.பி., மதன் ஆய்வு!
வெள்ளி 15, மே 2026 9:01:28 AM (IST)










