» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

போக்சோ வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

செவ்வாய் 12, மே 2026 9:16:44 PM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான நபர் மீது, தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் (குண்டர் சட்டம்) நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஓட்டப்பிடாரத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (56) என்பவர், கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கில் முக்கிய எதிரியாகச் சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டார். இவரது தொடர் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர், மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்குப் பரிந்துரை செய்தார்.

இதனை ஆய்வு செய்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன், ராமகிருஷ்ணனைத் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சித் தலைவருக்குப் பரிந்துரை வழங்கினார். இதனை ஏற்று மாவட்ட ஆட்சித் தலைவர் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், ராமகிருஷ்ணனை இன்று கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் (1982) கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து அவர் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital





Thoothukudi Business Directory