» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கே.சின்னத்துரை தங்க மாளிகையில் அட்சய திருதியையில் தங்கம் வாங்க குவிந்த மக்கள்!

திங்கள் 20, ஏப்ரல் 2026 7:09:52 PM (IST)



தூத்துக்குடி கே.சின்னத்துரை அன் கோ தங்க மாளிகையில் அட்சய திருதியை முன்னிட்டு நகை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. தங்கம் வாங்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கு எடைக்கு, எடை வெள்ளி இலவசமாக வழங்கப்பட்டது.

தென் தமிழகத்தில் மக்களின் பேராதரவை பெற்ற பிரபல ஜவுளி மற்றும் தங்க நகை விற்பனை நிறுவனமான கே.சின்னத்துரை அன்கோ தங்க மாளிகை, ஏரல், திருச்செந்தூர், தூத்துக்குடி, சென்னை, திருநெல்வேலியில் இயங்கி வருகிறது. தூத்துக்குடி கே.சின்னத்துரை அன் கோ தங்க மாளிகையில் அட்சய திருதியை முன்னிட்டு கடந்த 1 வாரமாக‌ சிறப்பு விற்பனை நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் இன்று அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால், செல்வம் பெருகும் என்பது ஐதீகம் என்பதால் நகை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. தங்கம் வாங்கிய அனைவருக்கும் அதே எடைக்கு வெள்ளி பொருட்கள் வழங்கப்பட்டது. அட்சய திருதியை முன்னிட்டு, பட்டுசேலை வாங்கவும் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் சின்னத்துரை அன்கோ ஜவுளி நிறுவனத்தின் பட்டுச் சேலை பிரிவிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் வாடிக்கையாளர்களுக்கு மோர், தயிர்சாதம், கேசரி போன்றவையும் வழங்கப்பட்டன. 



இதற்கான ஏற்பாடுகளை நிறுவன பங்குதாரர்கள் கே.திருநாவுக்கரசு, எஸ்.அரிராமகிருஷ்ணன், டி.நமசிவாயம் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






Thoothukudi Business Directory