» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

திங்கள் 20, ஏப்ரல் 2026 4:47:43 PM (IST)

தூத்துக்குடியில் வீட்டில் மின்சார மோட்டார் சுவிட்சைப் போட்டபோது மின்சாரம் பாய்ந்ததில் இளம்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாதவன் நகரைச் சேர்ந்தவர் ஆனந்த்குமார். இவரது மனைவி தங்கமாரியம்மாள் (35). இவர் இன்று தனது வீட்டில் துணி துவைத்துக் கொண்டிருந்தபோது, தண்ணீர் மோட்டாரை இயக்குவதற்காக அதன் சுவிட்சைப் போட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில், சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.

அவர் கீழே விழுந்து கிடப்பதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரது கணவர் ஆனந்த்குமாருக்குத் தகவல் அளித்தனர். அவர் தனது மனைவியைக் காப்பாற்ற முயன்றபோது, அவர் மீதும் லேசாக மின்சாரம் பாய்ந்துள்ளது. பின்னர், உடனடியாக கார் மூலம் தங்கமாரியம்மாளைத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

மருத்துவமனையில் தங்கமாரியம்மாளைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். அவரது உடல் தற்போது பிரேதப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாரிச்செல்வம் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






Thoothukudi Business Directory