» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்: மாநகராட்சி ஆணையர் தகவல்
திங்கள் 16, பிப்ரவரி 2026 4:14:27 PM (IST)
தூத்துக்குடி மாநகருக்கான முக்கியக் குடிநீர் விநியோகப் பாதைகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், நாளை (பிப்ரவரி 17) செவ்வாய்க்கிழமை மாநகரப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாநகரின் குடிநீர் ஆதாரங்களான வல்லநாடு தலைமை நீரேற்று நிலையம், கலியாவூர் மற்றும் கீழ வல்லநாடு குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு மின்சாரம் வழங்கும் கொம்புகாரநத்தம் துணை மின் நிலையத்தில், நாளை (17.02.2026) மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.
மின்வாரியத்தின் இந்தப் பராமரிப்புப் பணி காரணமாக, நாளை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும். குடிநீர் விநியோகத் தடையைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாநகராட்சி ஆணையர் சி. பிரியங்காகேட்டுக் கொண்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆத்தூர் வெற்றிலை: வரலாற்று ஆவணக் குழுவின் விழிப்புணர்வுப் புத்தகம் வெளியீடு!
திங்கள் 6, ஏப்ரல் 2026 11:14:05 AM (IST)

ஓட்டப்பிடாரம் தொகுதியில் வெற்றி யாருக்கு? பலமுனை போட்டியால் வாக்குகள் சிதறும் நிலை!
திங்கள் 6, ஏப்ரல் 2026 10:33:25 AM (IST)

மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாப சாவு!
திங்கள் 6, ஏப்ரல் 2026 10:24:56 AM (IST)

செண்பகவல்லி அம்மன் கோவில் பங்குனித் திருவிழா தொடக்கம்: ஏப்ரல் 13ல் தேரோட்டம்!
திங்கள் 6, ஏப்ரல் 2026 8:20:49 AM (IST)

பைக் மீது அரசு பேருந்து மோதல்: இளைஞர் பலி!
திங்கள் 6, ஏப்ரல் 2026 8:00:53 AM (IST)

ஆட்சியர் காரை மறித்து அவதூறு பேசிய வாலிபர்; கார் பறிமுதல் – போலீஸ் விசாரணை!
திங்கள் 6, ஏப்ரல் 2026 7:56:38 AM (IST)







